வதிரிக்கு ஒரு மகுடம்

வல்ல புகழ் சேர் வதிரி மண்ணின் வல்லமையாம் , வற்றாத சேவையின் ஓய்வின்றிய நாயகனுமாம் , மங்காத புகழின் மகோன்னத சேவகனுமாம் இவ்ன். , சேவைக்கே தேவையான சேவகன் இவன் - ஆதலால் தான் செல்லுமிடமெல்லாம் சொல்லாமலே சேவையாற்றக்கூடிய செயல் வீரன் . மங்காத புகழ் நிறை சேர் - எங்கள் மன்றத்தை பலசமயங்களில் நகரச்செய்த அச்சாணி இவன் . வைரத்தின் வைரம் என்றொரு சரியான அடைமொழிக்கூடாய் வைரமாகி இன்று அகில இலங்கை உதைபந்தாட்ட குழுவின் செயலாளர்களில் ஒருவன் ஆனான்
உதைபந்தோடு உறவாகி பிராந்தியங்கள் கடந்தும் பங்காற்றிய பண்பாளன் இவன் . வரலாற்றுச் சிறப்புமிக்க வதிரி டயமன்ட்ஸ் இன் வரலாற்று நாயகன் இவன் .
கிளாக்கர் வழிவந்த செயல் வல்லவன், நிர்வாகத் திறன் இவனுக்கு கொடை , வழி நடாத்தல் இவனுக்கு வரம் , கொண்டு நடத்தல் இவனுக்கு திறன் டயமன்ட்ஸ் என்றும் இவனுக்கு உயிர். நெருக்கடியான போர் சூழல்களில் சமூகப் பணியால் பெரும் பங்காற்றியவன் . நெருங்க முடியா சாதனைகளெல்லாம் நொடிப்பொழுதில் கண்டவன் .. மக்களின் துயரறிந்து மக்கள் பணியாற்றிய மகத்தான சேவகன் கிராம சேவகனாய் , கிராமத்திலும் சேவகனாய் பாரறிய பணியாற்றிய பண்பாளன் . உலகம் சுற்றும் வாலிபன் இவன் அரசசேவையிலுருந்து ஓய்வுபெற்றும்...
அரசு அவனை விடுவதாய் இல்லை இந் நாளதனில் நாம் ஊர்கூடி வாழ்த்துவோம், . செல்லுமிடமெல்லாம் தன் திறனால் அனைவரையுமே அரவணைத்துச் செல்லும் பண்பாளன் இவன் .. மிகச் சிறந்ததொரு பேச்சாளனாய் , கலை இலக்கியங்களின் ரசிகனாய் , தடம் பதித்த விளையாட்டு வீரனாய் , தரம் கொண்ட மத்தியஸ்தனாய் , உரம் கொண்ட நிர்வாக சேவகனாய் , இனமானம் கொண்ட உணர்வாளனாய் , பல்பரிணாமம் கொண்ட எங்கள் ஆளுமைச் செல்வன் இன்று இலங்கை உதைபந்தாட்ட குழுவில் செயலாளர் ஆனான்,வடமராட்சி இன்று உங்களால் பெருமை கொள்கிறது, இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் துணை பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்ட வரதராசன் ஐயாக்கு வாழ்த்துக்கள் அந்த வைரத்தை அகமகிழ்வோடு வாழ்த்துகிவோம் .
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று புதிய தலைவராக தெரிவாகியுள்ள திரு.ஜஸ்வர் உமர் அவர்களுடனும். உப தலைவர் திரு. இ.ஆர்னோல்ட் ( யாழ், உதைபந்தாட்ட லீக்)அவர்களுடனும் , எமது வைரம் பிரதி பொது செயலாளராக திரு. தி.வரதராசன் ( வடமராட்சி உதைபந்தாட்ட லீக் ) தெரிவு செய்யப்பட்டிருப்பது நமக்கு ஒரு பெரும் மகுடமே. அவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கும் எங்களது வாழ்த்துக்கள்.
தன்னை வளர்த்த எம் பெருந் தலைவர் திரு.சி.க.இராஜேந்திரன் அவர்களிடம் முதல் ஆசி பெற்று தன் பணியைச் செய்யத்தொடங்கும் நம் வரதனை நாம் வாழ்த்துவோம்.நீங்கள் விட்டுச்சென்ற இடமெல்லாம் நான் தொட்டுச்சென்றதால் எனக்கு கிடைத்த வெகுமதி பிரதிப் பொதுச் செயலாளர் பதவி. உங்களை அன்புடன் மதிப்புடன் வணங்குகின்றேன் ஐயா.
பூவற்கரையான் துணையும் பெரியவர்கள் ஆசீர்வாதங்களும் உங்களுக்கு இருக்கும் வரை நீங்கள் என்றென்றும் வதிரியின் பெறுமதி மிக்க மகுடம்தான்.
தகவல்:-ஆசிரியர் மன்றம்