பழங்களும் மருத்துவமும்

அவகோடா பழம்

அவகோடா பழம் உண்பதால் கிடைக்கும் நன்மைகள்....

மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகச் சிறந்த பங்கு வகிக்கிறது அவகோடா பழம். இதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன.


ஆர்த்தரைட்டீஸ் வந்து கஷ்டப்படுபவர்கள் இந்த பழங்களை தின்றால் அவர்களின் மூட்டுவலி மறைந்துவிடும்.  வயோதிகத்தால் ஏற்படும் மூட்டுவலி எலும்பு தேய்மானத்தால் தோன்றக்கூடியது.  இந்தப்பழம் தின்றால் மூட்டுப்பகுதிகளில் எலும்பு தேய்மானம் ஏற்படாது.
எண்ணெய்ச் சத்து மிகுந்த இப்பழத்தின் சதைப் பகுதி வைட்டமின், புரதம் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தது. வறண்ட சருமத்தினருக்கு இப்பழம் ஒரு வரப் பிரசாதம். எண்ணெய் சத்து மிகுந்த இப்பழம் அழகு சாதனப் பொருட் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கின்றது.
சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சினைகளை தீர்க்க இந்த பழத்தை நாம் சாப்பிடலாம்.  இது சிறுநீரை அதிகளவில் உற்பத்திசெய்து சிறுநீர்ப்பாதையில் உள்ள கற்களின் அடைப்பை நீக்குகின்றது.
உடலில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்துகின்றது.  செரிமான பிரச்சினைகளையும் சரிசெய்யக்கூடியது. கெட்ட கொழுப்பை குறைப்பதால் நமக்கு உடல்நலம் மற்றும் உடற்பருமன் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.
இதில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்த பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு மிகச் சிறந்ததாகும். 
மேலும் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரிக்கும்.
இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன, நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
புற்றுநோய்ப் போன்ற கொடிய நோய் தாக்கியவர்களுக்கு அவகோடா பழம் அதிகமாக கொடுத்தால் அது நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கும். இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்தும்.
அவகோடா பழத்திலுள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்னைகளை சரிசெய்வதாக ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது, எனவே எலும்புகள் வலிமையடைகின்றன.
கண்களின் பார்வை திறன், புரை வளர்தல் ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றது. இந்த அவகோடா மிகவும் பயனுள்ள பழம்.

சிறுநீரக பிரச்னையால் அவதிப்படாமல் இருக்கவும், தெளிவான கண்பார்வைக்கும் அவகோடா பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வருவது அவசியமாகும்
அவகாடோவின் அருமையை பாருங்க!
மெக்ஸிகோ நாட்டை பிறப்பிடமாக கொண்டாலும் எல்லா இடங்களிலும் காணபடுகிறது. நம் தமிழ் நாட்டில் கூட மலை பிரதேசங்களில் விளைவதாக கூறுவார். இலங்கையில் இருந்தும் ஏற்று மதியாகிறதாம்.இப்போது,இலங்கையில் என் தம்பியின் மனைவியின் பிறப்பிடத்தில் நிறைய இருக்கிறது;இனாமாக நிறைய சாப்பிடுவேன் வீட்டிற்கும் கொண்டுவருவேன், ஒருகிலோ 30 றியால், இலங்கை காசுக்கு 1230.00 ரூபா.   சென்னையில் எல்லா பழக்கடைகளிலும், சூப்பர் மார்கெட்களிலும் கிடைக்கிறது.இந்த பழத்தின் வடிவமும் அதன் இயற்பெயரும் சற்று சுவாரஸ்யமானதுதான் இதயம் வேண்டுவோர் மேலே படியுங்கள். கும்மி அடிக்க வந்தவர்கள் எல்லாம் போங்கள்  பன்னிகுட்டியின் பக்கம். இதயநோயினால் பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டுவருவதாக அறிக்கைகள் மிரட்டுகின்றன. அது உண்மையும் கூட. வயதானவர்கள் என்று இல்லாமல் இப்போதெல்லாம் இளம் வயதினரும் இந்த சுழலில் சிக்கி தவிக்கும் அபாயம் முன்னை விட இப்போது மிக அதிகம். ஆயிரம் காரணங்கள், உணவு பழக்க வழக்கங்கள் சொல்லபட்டாலும் இன்றைய அதிவேக உலகில் இவைகள் இதன் பாதிப்பு என்னவோ அதிகம் தான்.இதயத்துக்கு இதமான, தீங்கு செய்யாத உணவு வகைகளை அறிந்து கொண்டு அவைகளை கடைபிடுப்பதும் அவசியமாகிப்போனது இன்று. அவகாடோ பழம்: இதன் பெயர் சிங்களத்தில் அலிகட்ட பேர என்றும் தமிழில் யானைபழம் என்றும்  பட்டர் புரூட் (Butter Fruit) என்கின்றும் சொல்வர். முன்பெல்லாம் நம் ஊர் கடைகளில் இது போன்ற பழங்களை பார்க்க இயலாது.இன்று எல்ல இடங்களிலும் விற்கின்றனர். ஆரம்பத்தில் இந்த பழத்தில் கொழுப்பை உண்டாகும் காரணிகள் அதிகம் என்று கூறி இதனை ஒதுக்கி வைத்தனர்
. உடல் எடை வேண்டுவோர்கள் இதனை சேர்த்துக்கொண்டால் எடை கூடுகிறது என்பது அனுபவ உண்மைதான். நான் முன்னர் ஷார்ஜாவில் இருந்த பொது அங்கு சூப்பர் மார்கெட்டுகளில் இவைகளை பார்த்து "இது என்ன பழம் "வியந்ததுண்டு. பின்னர் அதன் சிறந்த பயன்களை அறிந்து கொண்டு பயன்படுத்தினேன்

உண்மையில் அவகாடோ அதிக கொழுப்பை உடலுக்கு தருவது உண்மைதான். ஒரு சாதாரண அவகாடோ பழத்திலிருந்து சுமார் 30  கிராம் கொழுப்பு சத்து கிடைக்கிறதாம்.( குச்சி யான தேகம் உள்ளவர்கள் இனிமேல் அவகாடோ வாங்கி தின்று உடம்பை தேற்றலாம்) ஆனால் இந்த பழத்தில் கிடக்கும் கொழுப்பு மானோ சாச்சுரேட்டட் rich in monounsaturated fat  வகையை சார்ந்ந்தது .ஆனால் இந்த வகை கொழுப்புதான் நம் உடலில் சேரும் "கெட்டவகை "கொழுப்பை  LDL (bad) cholesterol குறைகிறதாம்.அதோடு "நல்ல வகை கொழுப்பின் "  raise HDL (good) cholesterol  அளவை அதிகரிக்கிறதாம். இதோடு இல்லாமல் அவகாடோ உடலில் பொட்டாசியத்தின் அளவையும் அதிகரிப்பதால் இந்த பழம் இதயத்துக்கு மிக நல்லது.மேலும் ஒரு பழத்திலிருந்து சுமார் 300  கலோரி எரி சக்தி கிடைப்பதால் இந்த பழம் சுலபமாக நம் தேவையினை பூர்த்தி செய்கிறது.  

நமக்கு அவகாடோ பழம் என்றால் அது மற்ற பழ வகைகளிப்போல இனிப்பும் மனமும் சுவையும் இருக்கும் என்று நினைக்காதீர்கள். இதனை பழக்க வைத்து சாப்பிடுவதே ஒரு வேடிக்கை. கடைகளில் கரும் பச்சை நிறத்தில்
தடித்த தோலுடன் காணப்படும் இந்த பழம் பழுத்தவுடன் சற்று மிருதுவாக மாறும் அன்றி, நிறமோ, மனமோ இருக்காது. உள்ளே வெளிர் மஞ்சள் நிறத்தில் சதைபகுதி காணப்படும். அதனுள்ளே கடினமான உருண்டை வடிவில் ஒரு கொட்டை இருக்கும். அவ்வளவுதான். நாம் மாம்பழத்தை கிடை மட்டமாக கத்தியினால் சுற்றி வெட்டி பின்னர் சற்று சுழற்றி எடுத்தால் ஒரு குழிவான பகுதியும் ஒரு கொட்டை நடுவில் இருக்கும் பகுதியும் கிடைக்கும் அல்லவா? அதுபோலவே இந்த பழத்தையும் வெட்டி எடுத்து பயன் டுத்தலாம்.இதற்கென்று தனிப்பட்ட சுவை இல்லை எனவே நாம் விரும்பும் படி இதில் சுவைகளை சேர்த்துகொள்ளலாம்.  பெரும்பாலும் மற்ற நாடுகளில் இதனை அப்படியே சலாட் ஆக சாப்பிடுவதால் சமைக்க / வேக வைக்க வேண்டுவதில்லை. நான் எப்படி பயன் படுத்துவேன் என்றால் பழத்தின் உள் பகுதியில் இருக்கும் சதை கதுப்புகளை ஒரு சிறிய டீ ஸ்பூன் உதவியால் முற்றிலும் வழித்து எடுத்து விட்டு அவைகளை தட்டில் இடுவேன். அதன் மீது சிறிது மிளகுதூள்,சிறிது சீரகத்தூள் தூவினால் ரெடி. நான் உப்பு சேர்பதில்லை.அப்படியே எடுத்து சாபிட்டுவிட்டு சூடாக ஒரு டீ யை அடித்துவிட்டு காலையில் வேலைக்கு செல்வது வழக்கம்.தேவையானால் சிறிது உப்பை தூவிக்கொள்ளலாம். இல்லையென்றால் தோலை சீவி விட்டு சிறு கியூப் துண்டுகளாக வெட்டி அப்படியே கூட சாப்பிடலாம். சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடலாம்.  இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்ல காலை நேர உணவாக கூட இதனை கொள்ளலாம். ஏனெனல் இதில் நார்ச்சத்தும் ,நல்ல உடலுக்கு ஆரோக்கியமான பழம்,புது மணத்தம்பதியருக்கு ரொம்ப சிறந்தது.

நான் படித்து அறிந்தது
மன்றத்திற்காக:-லோகேந்திரா